----------------------------------------------------------------------------------------------
வளைந்து வளைப்பீர்
கேசம் வளையாமல் கோடாய் வகிடேது?
அனித்த மலரன்ன வாழ்க்கை ஆகாது ஆகாது கேண்மோ!
நார் வளைந்து கொடாமல் போனால் நாற்றத் துழயுந்தான் மாலையுமாமோ?
விடமரம் விட்ட வேரும் மண் பொறுத்து வான் மழைக்கு வழி தருமதை மறுத்தலாமோ?!
படிக்கட்டாய் சீரமைந்த பாடலிது புதியதோர் கவிமரபை புகல்கிறது ; புதியதிந்த மரபினை யானுரைத்த போது புன்னகைத்து வளைந்ததென் தமிழே!