Friday, September 19, 2008

சூரிய வணக்கம்

ஆயிரம் கரங்கள் நீட்டி, அணைக்கின்ற தாயே போற்றி !
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி, இருள் நீக்கும் தந்தாய் போற்றி !
தாயினும் பரிந்து, சால சகலரை, அணைப்பாய் போற்றி !
தூரத்தே நெருப்பை வைத்து , சாரத்தைத் தருவாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம், துணைக் கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
ஞாயிறே நலமே வாழ, நாயகன் வடிவே போற்றி ,
நானிலம் உள நாள் மட்டும் போற்றி போற்றி போற்றி !!!

No comments: